Sunday, December 29, 2024

Gokulathil pasukalellam tamil lyrics | கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்





கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்

கோபாலன் குழலைக் கேட்டு

நாலுபடி பால் கறக்குது இராமாரி!

அந்த மோகனின் பேரைச் சொல்லி

மூடி வைத்த பாத்திரத்தில்

மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி!



இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி

இராமாரி ஹரே கிருஷ்ணாரி




கண்ணன் அவன் நடனமிட்டு

காளிந்தியில் வென்ற பின்னால்

தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி!

அவன் கனி இதழில் பால் கொடுத்த

பூதகியைக் கொன்ற பின்னால்

கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!



இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி

இராமாரி ஹரே கிருஷ்ணாரி




குளத்தில் முங்கிக் குளிக்கையிலே

கோவிந்தன் பெயரைச் சொன்னால்

கழுத்தில் உள்ள தாலி நிக்குது இராமாரி!

சேலை திருத்தும் போது அவன் பெயரை

ஸ்ரீரங்கா என்று சொன்னால்

அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!



இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி

இராமாரி ஹரே கிருஷ்ணாரி



படிப்படியாய் மலையில் ஏறி

பக்தி செய்தால் துன்பம் எல்லாம்

பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி!

அடி படிப்பில்லாத ஆட்கள் கூட

பாதத்திலே போய் விழுந்தால்

வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!



இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி

இராமாரி ஹரே கிருஷ்ணாரி


Popular Post